அற்புதம் வராகம்

கஜுராஹோ லக்குமான கோவில் அற்புத வராஹ மூர்த்தி சிலை. தன்னுள் அணைத்து ஜீவராசிகளையும் கொண்ட வடிவம். தொலைவில் இருந்து பார்கையில் சிற்பியின் கலைநுட்பம் சரியாக தெரிவில்லை – சற்று அருகில் சென்று பாருங்கள்..

 

 

அடடா பன்றியின் கோரை பல் – பின்னோக்கி இருக்கும் காது மடல் – எங்கும் சிற்பங்கள்


 

கால் , தொடை முதுகு என்று எங்கும் வடிவங்கள் – அக்காலத்தில் பாதாள லோகத்தை உணர்த்த நாக வடிவத்தை இடுவர் – இங்கும் உண்டு – எனினும் தலை சிதைந்து விட்டது – நாகத்தின் உடம்பு அழகே பன்றியின் கால்களுக்கு நடுவில் செல்வதை பாருங்கள்

 

 

( நாம் முன்பு பார்த்த உதயகிரி சிற்பத்தில் இந்நாகத்தை நாம் கண்டோம் ) – அது மட்டும் அல்ல பல இடங்களில் சிதைந்து உள்ள இச்சிலை – அது கண்டு எடுத்த தேவியையும் தொலைத்து விட்டது -மிஞ்சியது அவள் பாதங்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *