Quantcast


நண்பர்களே , நாம் இன்றைக்கு ஒரு வெண்கலச் சிலையை பார்க்கப் போகிறோம். இது ஒரு சாதாரண சிலை அல்ல, கண்ட உடன் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சோழர் கால சிலை. அது என்ன சோழர் கால சிலைக்கு உலகெங்கும் அப்படி ஒரு தனிப் பெருமை! வாருங்கள் காண்போம்.

நுண்ணிய வேலைப்பாடா? சிற்பியின் கலைத் திறனா? முக பாவங்களா? அங்க அமைப்புகளா? இவை அனைத்தும் ஒருங்கே அமைந்திருந்தாலும் அதற்கு மேலும் ஏதோ ஒரு கவர்ச்சி. அந்த ஏதோ ஒன்று என்ன? இந்த பதிவை படித்த பின்னர் நான் எதை குறிப்பிடுகிறேன் என்று தங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா என்று பார்ப்போம்.

தில்லி அருங்காட்சியகத்தில் அழகாய் வீற்றிருக்கும் சிலையை முதலில் பார்ப்போம்…

vishnu chola bronze delhi museum

மஹா விஷ்ணு, ஆபத்பாந்தவன் . நாம் இதுவரை ஏராளமான கற்சிலைகளை பார்த்துள்ளோம், ஆனால் உலோகக் சிலைகள் மிகவும் நேர்த்தியானவை, காரணம் உலோகத்தில் வேலை செய்வது கல்லை விட சற்று எளிது, அதனால் கலைஞன் இன்னும் நேர்த்தியாக வேலை செய்யலாம். நம்முடைய முந்தைய ‘சிங்கை’ உமை சிற்பம் பற்றிய பதிவில் சோழர்கள் வெண்கலச் சிலைகளை எப்படி வடித்தார்கள் ( லாஸ்ட் வாக்ஸ் முறை ) என்பது பற்றி விரிவாக பார்த்தோம். இன்று அதே முறை குறித்து கோதை நாச்சியார் தம் அழகு தமிழில் மனம் உருகி பாடிய பாட்டை கேட்டு நாமும் ரசிப்போம்… ( வழக்கம் போல் சரியான பாசுரத்தை தேடித் தந்த திரு திவாகர் அவர்களுக்கு நன்றி )

மழையே மழையே மண்புறம் பூசியுள்ளாய் நின்ற
மெழுகூற்றினாற்போல் ஊற்றுநல்வேன்கடத்துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத்தகப்படத்
தழுவநின்று, என்னைத் ததற்றிக் கொண்டூற்றவும் வல்லையே

என்ன அருமையான வரிகள்! மெழுகுச் சிலை ( மோல்ட்) அதனை அணைக்கும் களிமண், சுளையில் வைத்து சுடும்போது உள்ளே இருக்கும் மெழுகை உருக வைக்கும் . அதே போல திருவேங்கடவன் தன்னை வெளியில் அணைத்து உள்ளே உருக வைக்கின்றான் என்கிறாள்.

அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் அவனது சுந்தர வடிவத்தை வடிக்கும் போது, அவன் கருணை முகம் எப்படி இருக்க வேண்டும். ஒருமுறை பார்த்தாலே உள்ளத்தை உருக்கி அவன் அன்பில் சரண் புக செய்யும் சுந்தர மதி வதன முகம் அல்லவே அது.

closeup of vishnu
the loving smile of vishnu

அது மட்டுமா, அவன் அலங்காரப் பிரியன்.

the intricate work on the clothing

அழகைப் பார்த்தோம், இப்போது நுண்ணிய வேலைப்பாடை பார்ப்போம். ( தலைப்புக்கு வர வேண்டுமே )

கவனமாக பாருங்கள் - மீண்டும் உங்களுக்கு ஒரு பரீட்சை.

the srivatsam
the srivatsam mark

என்ன கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி, உங்களுக்கு ஒரு சிறு குறிப்பு தருகிறேன் முயன்று பாருங்கள். வலது மார்புக்கு சற்று மேலே பாருங்கள்.

srivatsam

என்ன அது. சிலை வடிக்கும் பொழுது ஏதாவது ஒட்டிக்கொண்டதா ? இல்லை - அது ஒரு “மறு” (மச்சம்) - இதைத்தான் கலித்தொகையில் “திரு மறு மார்பன் போல்” என்று பாடினரோ!

- நன்றி கீதா அம்மா - சமஸ்கிருத வரிகளை படியுங்கள்

durdAntha daithya visikha ksahtha-பத்ரபாங்கம்

துர்தாந்த தைத்ய விஷிக்ஹ க்ஸாஹ்த - பத்ரபாங்கம்

veerasya tE VibudhanAyaka baahumadhyam |

வீரஸ்ய தே விபுதாநாயக பாஹுமட்ஹ்யம் |

SrIvathsa Kousthubha RamA வணமளிகங்கம்

ஸ்ரீவத்ச கௌஸ்துபா ராம வணமளிகங்கம்

chinthAnubhUya labhathE charithArTathAm na: ||

சிந்தானுபூய லபதே ச்சரித்தார் ததாம் ந:||

( தமிழாக்கம் நன்றி முனைவர் கண்ணன் அவர்கள் )

ஓ! தெய்வ நாயகா!

பொல்லா அசுரர் உன்னுடன் போர் புரிந்த போது பட்ட விழுப்புண்கள் உன்
மார்பில் கணிதக் கோடுகளாக இங்குமங்கும் பரவி உன்னை அளக்கின்றன.
அப்போர்களில் நீர் கண்ட வெற்றியின் சின்னமே போல் இவ்விழுப்புண்கள் உன்
மார்பை அலங்கரிக்கின்றன.

உன்னோடு பிறந்த ஸ்ரீவத்சமெனும் மருவும், கௌஸ்துபம் எனும் செம்மணியும்
இதனுடன் பொலிவுடன் திகழ்கிறது.

பூமித்தாய் மகிழ்வுடன் கோர்த்தளித்த காட்டுப்பூக்கள் சேர்ந்த அழகிய
வனமாலை உன் அழகிற்கு அழகு சேர்கிறது.

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல், அன்னை ஸ்ரீதேவி
‘அகலகில்லேன்’ என உன் திருமார்பை அலங்கரிக்கிறாள். அவளது திருவழகு
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ எனும்படியாக உன் வடிவழகிற்கும்,
சுபாவத்திற்கும் போட்டியாய் அமைந்துள்ளது.

இத்தனையும் அசுரர் தந்த விழுப்புண்ணில் பிரதிபலித்து வண்ணக்கோலமாக உன்
நெஞ்சை மாற்றுகின்றன.

இத்தனையும் கண்டு என் உள்ளம் பூரிக்கிறது. இதுவல்லவோ சேவை! ஒரு
சேதனனுக்கு கிடைக்கும் அரிய சொத்து.

என்ன அன்பர்களே சோழர்களின் வெண்கலச் சிலையின் மகத்துவத்தை அனுபவித்தீர்களா!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வியாழன், ஜூன் 25th, 2009 அன்று 14:31 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

  1  

நன்றி சொல்லவேண்டியது திரு சடகோபன் அவர்களுக்கு. அருமையான பதிப்புக்குப் பாராட்டுகள் விஜய்.

ஜூன் 25th, 2009 at 14:45
ஹரி கிருஷ்ணன்
  2  

உங்களுடைய மௌன ரசிகர்களில் ஒருவன் நான். மிக அரிய பணியை அருமையாகச் செய்கிறீர்கள்.

//மஹா விஷ்ணு, ஆபத்பாண்டவன்//ஆபத்பாந்தவன் என்று இருக்கவேண்டும். தட்டுப்பிழையோ?

ஜூன் 25th, 2009 at 17:44
Kathie B.
  3  

How interesting! I never thought of the Srivatsam as a mole — just as Shri living in Narayana’s heart,
as Sita/Ram dwells in Hanuman’s heart. [perhaps where the latter got the idea for it?]
Buddha has a tuft of hair there, Jaina Tirthankaras, a jewel.

ஜூன் 25th, 2009 at 18:46
Dhivakar
  4  

‘அகலகில்லேன் இறையுமென அலர்மேல் மங்கையுரை மார்பா’ என்று நம்மாழ்வார் பாடியதைப் பார்த்துதான் இந்த சிலை வடித்தார்களோ என்னவோ.

ஆண்டாள் எத்தனையோ புதிய செய்திகளை தன்னுடைய தமிழ்மூலம் நமக்குத் தெரிவித்தவள். இதில் இந்த மெழுகூற்றி வடிக்கும் முறையும் ஒன்று. மழையைப் பற்றி விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த பார்வையில் பாடப்பட்டதுதான் ‘ஆழிமழைக் கண்ணா’ திருப்பாவைப்பாடல்.
ஆண்டாளுக்கு திருவேங்கடவன் வரம் கிடைத்தது என்றால், தமிழ்த்தாய்க்கு ஆண்டாள் மூலமாக வரம் கிடைத்தது. எத்தனை புதிய செய்திகளை வருங்கால மக்களுக்குத் தெரிவிக்க முடியுமோ, அத்தனையும் தன் பாட்டுக்கள் மூலம் ஆண்டாள் தெரிவித்துவிட்டாள்.

அருமையான சிற்பம் இது விஜய்.. வாழ்த்துகள்!!

திவாகர்

ஜூன் 26th, 2009 at 11:57
  5  

I am grateful to you for I am enjoying South Indian Sculptures with your beastiful explanations. Incidentally Vishnu’s ears are too long and it is pierced making a big hole. Is it a Buddhist influence.

ஜூன் 28th, 2009 at 12:34
Manii
  6  

we were all talking about six pack , but look at the beauty of vishnu, no six packs can match this beauty !!!

enna vilai azhagae !!!

ஜூலை 1st, 2009 at 17:46
anadhinatarajan
  7  

Konerirajapuram natarajar also has ‘maru, hair cut mark in his leg. On abhishekam day you can see them. It is swayambu bronze icon.When Pandia king tried to test nataraja with (”OOLI”) chisel from the cut he bleed.

ஜூலை 2nd, 2009 at 9:41
Srinivasan N. (cheenu)
  8  

Dear VJ,

This is a wonderful caption and thankfully is accompanied by a full snap with the caption Vishnu Chola Bronze Delhi Museum.

Can you pls. send me the link to this caption, because I would like to use it for some articles to which I contribute on the Wikipedia..

I shall be so grateful.

Cheenu

அக்டோபர் 29th, 2009 at 15:00

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி